ரசிகரின் கன்னத்தில் அறைந்தாரா சல்மான் கான்! வைரலான விடியோ பதிவு! MakkalPost

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘பாரத்’ என்ற படம் ரம்சான் அன்று வெளியானது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்டது. அதைக் காண சல்மான் கான் வந்தார். அவரைப் பார்க்க ரசிகர் கூட்டம் சூழ, சல்மான் கானின் பாதுகாவலர்கள் அவர்களை விலக்கி வழி அமைத்துத் தந்தனர். இந்த நேரத்தில் சல்மான் கானை பார்க்க முயன்ற ஒரு குழந்தை ரசிகரிம் பாதுகாவலர் அநாகரிகமாக நடந்து கொள்ளவே, அதைப் பார்த்து கோபமடைந்த சல்மான் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பாதுகாவலர் கன்னத்தில் அறைந்துவிட்டார்.
ரசிகர் ஒருவர் இந்தக் காட்சியை தனது செல்ஃபோனில் பதிவு செய்திருக்கவே, இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவிட்டது. சல்மான் கான் செய்தது சரியென்றும், என்னதான் இருந்தாலும் ஒருவரை பொதுவெளியில் ஓங்கி கன்னத்தில் அடித்தது தவறென்றும் இருதரப்பு வாதங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
ஓம்சல்மான்கான் இருப்பது ஒரு ரசிக குழந்தையுடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக பாதுகாவலரை உண்மையில் அறைந்தார்பாரதம் சல்மான்கான் pic.twitter.com/ecmP
mdashheartgetshurtஜூன் 5, 2019/a>