தோல் நோய்களைக் குணமாக்க உதவும் அருமருந்து MakkalPost

தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரைக் கீரை கருஞ்சீரகச் சூரணத்தைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
ஆரைக் கீரைச் சாறு – 350 மி.லி
கருஞ்சீரகம். – 150 கிராம்
செய்முறை
முதலில் ஆரைக் கீரையை ஆய்ந்து எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்.
கருஞ்சீரகத்தைச் சுத்தப் படுத்திக் கொள்ளவும். அரைத்து எடுத்து வைத்துள்ள சாற்றுடன் கருஞ்சீரகத்தைச் சேர்த்து நன்கு ஊறவைக்கவும்.
நன்கு ஊறின பிறகு அதனை உலர வைக்கவும். உலர்ந்த பின்பு அதனை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல் சார்ந்த நோய்களைக் குணமாக்க அருமருந்தாகும்.
மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ஒரு கிராம் அளவுப் பொடியை எடுத்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் தேமல், படை மற்றும் கரும்படை போன்ற தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
மேற்கூறிய சூரணம் துணை உணவாகப் பயன்படக்கூடியது.
நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிற மருந்துகளோடு இதனைத் துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்த வேண்டும்.
– கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்
செல் : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
கோவை பாலா யூடியூப் சேனல்:
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ