June 9, 2025
Space for advertisements

இரும்புச்சத்து அதிகரிக்க இதைச் செய்யலாம்..! MakkalPost


தேவையான பொருட்கள்

கோட்டை நீக்கிய பேரீச்சம் பழம் – 10

உலர்ந்த திராட்சைப் பழம். – 10

ஏலக்காய்ப் பொடி. – 5 சிட்டிகை

தேன். – 3 தேக்கரண்டி

தண்ணீர். – தேவையான அளவு

செய்முறை

முதலில் பேரீச்சம் பழம் மற்றும் உலர் திராட்சை இரண்டையும் எடுத்துச் சுத்தப்படுத்தி நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் கழுவின பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறினபிறகு அதனை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கவும். பின்னர் அந்த ஜூஸூடன் ஏலக்காய்த் தூள் மற்றும் தேன் கலந்து சாப்பிடவும்.

சாப்பிடும் முறை

தயாரித்து வைத்துள்ள சாற்றை தினமும் காலை வேளை குடித்து வரவும்.

பயன்கள்

இந்த இயற்கை பானம் இரும்புச் சத்து மிக அதிகமாய் உள்ள பானம். உடலுக்கு உறுதித்தன்மையைத் தரக்கூடிய பானம். நரம்பு , இதயம் மற்றும் மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும். கண் பார்வைக்கு உறுதுணையாக இருக்க உதவும் பானம். தொண்டை அழற்சியை நீக்க உதவும் பானம். உஷ்ணத்தினால் உண்டாகக் கூடிய இருமலைப் போக்க உதவும் பானம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகாய் பயன்படுத்தவும்.

– கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
செல் : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
கோவை பாலா யூடியூப் சேனல்:
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
https://t.me/kovaibalavegetableclinic



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements

You may have missed