“இப்போ புரியுதா நான் ஏன் சிவாவ விடலைன்னு என அஜித் சொன்னார்” – சூர்யா பகிர்வு | கங்குவா பட ப்ரோமோஷனில் அஜித்தை பற்றி நடிகர் சூர்யா பேசினார் MakkalPost

மும்பை: “நான் சமீபத்தில் அஜித்தை சந்தித்தேன். அவர் என்னிடம், ‘இப்ப தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு’ என்று கூறினார். நீங்கள் ஒருமுறை சிவாவுடன் பணியாற்றினால், அவர் வேறொரு நடிகருடன் வேலை செய்வதைப் பார்க்க போறாமைப்படுவீர்கள்” என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பாலிவுட் நடிகை திஷா பட்டானி இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நட்டி, ரெட்டின் கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் படக்குழு ஈடுபட்டுள்ளது. அண்மையில் புரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட சூர்யா அளித்த பேட்டியில், “நான் சமீபத்தில் அஜித்தை சந்தித்தேன். அவர் என்னிடம், ‘இப்ப தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு’ என்று கூறினார். நீங்கள் ஒருமுறை சிவாவுடன் பணியாற்றினால், அவர் வேறொரு நடிகருடன் வேலை செய்வதைப் பார்க்க போறாமைப்படுவீர்கள். அந்த அளவு படப்பிடிப்பு நிறைவாக இருக்கும்.49-வயதிலும் உங்களுக்காக நான் இந்தப் படத்தில் சிக்ஸ் பேக் வைத்துள்ளேன்” என சூர்யா தெரிவித்தார்.