Tamil Live Breaking News: மக்களே உஷார்… சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை! – News18 தமிழ்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
நிலை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 5ஆம் தேதி வெளியிடப்படும்.
11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.
10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைகிறது.
11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21ஆம் தேதி முடிவடைகிறது.
12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடைகிறது.
12 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகிறது.
பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 5 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி முடிகிறது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி முடிகிறது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தவும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், மரக்கிளைகள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்படவும், மலைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கூடுதல் கவனத்துடன் ஆட்சியர்கள் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று 05.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் ஆந்திரா கடற்கரை நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று காலை முதல் மழை இல்லாததால், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க: கனமழை எதிரொலி… தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று மாணவர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
சென்னையில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.
கிண்டி, ஆலந்தூர், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகரிலும் கனமழை;
சென்னையில் இன்று கனமழையும், நாளை மிக கனமழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow us on
Download News18 App