School Leave : கொட்டும் கனமழை.. சென்னை, கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? – News18 தமிழ்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 உள் மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வானிலை மையத்தைப் பொருத்தவரையில் மிதமான மழை, கன மழை, மிக கன மழை என்று மட்டுமே கூற முடியும் என்ற பாலச்சந்திரன், எவ்வளவு சென்டி மீட்டர் மழை பெய்யும் என துல்லியமாக கூற முடியாது என தெரிவித்தார்.
இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று மாணவர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிகள் விடுமுறை தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் சென்னை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றே கருதப்படும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Follow us on
Download News18 App