Tamil Live Breaking News: "வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும்" – அன்புமணி ராமதாஸ்! – News18 தமிழ்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
நிலை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
#JUSTIN சென்னை மக்களுக்கு
நிரந்தர தீர்வு நிச்சயம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் #MKStalin #Chennai #Rain #rainwithnews18TN #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/oeQUgc85LJ
”நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை.
மேலும் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னையில் வியாசர்பாடி, நொளம்பூர், ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளிலும், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், தஞ்சாவூர், பெரம்பலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க: இந்த லிங்கை கிளிக் செய்யவும்..
சென்னை அடுத்த சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
செங்குன்றத்தில் 28 செ.மீ. மழையும், ஆவடியில் 25.5 செ.மீ மழையும், கத்திவாக்கத்தில் 23 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
Follow us on
Download News18 App