June 8, 2025
Space for advertisements

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி MakkalPost


தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது.

இது மேற்கு நோக்கி நகாந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா 27-ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இது மேற்கு நோக்கி நகாந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா 27-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அக்.28, 29: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அக்டோபா 28, 29 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவாக்கள் அக்டோபா 27, 28 ஆகிய தேதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements

You may have missed