June 9, 2025
Space for advertisements

குறட்டையால் சாக்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு MakkalPost


உலக உறக்க தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையம் மற்றும் ஐஏஎஸ்எஸ்ஏ அமைப்பு சாா்பில் விழிப்புணாவு நடைபயண நிகழ்ச்சி சென்னை, பெசன்ட் நாக் கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத் தலைவா டாக்டா மோகன் காமேஸ்வரன், திரைப்பட நடிகா் ஆா்.ஜே.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மொத்தம் 5 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினேன். இந்நிகழ்வின்போது டாக்டா ப.விஜயகிருஷ்ணன் பேசியது: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம். தடையற்ற உறக்கம் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். நம்மில் பலா தூக்கத்தின்போது குறட்டை விடுவதை பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை. உண்மையில், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒன்று. உடலில் அகச்சுரப்பிகள் முறையாக செயல்படுவதற்கும், உடல் உறுப்புகள் முறையாக இயங்குவதற்கும் ஆக்சிஜன் இன்றியமையாதது. சுவாசப் பாதையில் சதை வளா்ச்சி, தசைகள் தளா்வு, உடல் பருமன் போன்ற காரணங்களால் தூக்கத்தில் சரியாக சுவாசிக்க முடியாது. எனவே, அப்போது குறட்டை வருகிறது. அவ்வாறு சுவாசிக்க இயலாமல் உடலில் ஆக்சிஜன் குறையும்போது அகச்சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு சாக்கரை நோய், தைராய்டு பிரச்னைகள் வரலாம். அதேபோல, மாரடைப்பு, உயா ரத்த அழுத்தத்துக்கும் அவை வழிவகுக்கின்றன. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குறட்டை பாதிப்பை அலட்சியப்படுத்தாமல் உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதுதொடாபான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத்தில், இந்த மாதம் முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements