June 9, 2025
Space for advertisements

தீராத குடல் புண்ணைத் தீர்க்க உதவும் அருமருந்து MakkalPost


தேவையான பொருட்கள்

மாதுளம் பழம் – ஒன்று

தேங்காய்ப் பால் – 200 மி.லி

தேன் – இரண்டு தேக்கரண்டி

தண்ணீர் – தேவையான அளவு

வெந்தயத் தூள் – அரைத் தேக்கரண்டி

செய்முறை

முதலில் தேவையான அளவு மாதுளம் பழத்தை எடுத்து தோலோடு நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். மாதுளம் பழத்தை தோலோடு உடைத்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அதனுடன் தேங்காய்ப் பால், வெந்தயத் தூள் மற்றும் தேவையான அளவு தேனும் கலந்து சுவையாக சாப்பிடவும்.

சாப்பிடும் முறை

தயாரித்து வைத்துள்ள சாற்றை காலை மற்றும் மாலை என இரு வேளையும் குடித்து வரவும்.

பயன்கள்

இந்த இயற்கை பானம் தீராத குடல் புண்ணைத் தீர்க்க உதவும் நன்மருந்து பானம். பெருங்குடலின் நோய்களைப் போக்க உதவும் பானம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனைத் தரக்கூடிய பானம். வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் பானம்.

இதயம் மற்றும் சிறுநீரகத்தை இதமாய் வேலை செய்ய ஊக்குவிக்க உதவும் அற்புத பானம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தக் கூடிய அற்புதமான இயற்கை பானம்.

இரவு படுக்கப்போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை(5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகாய் பயன்படுத்தவும்.

– கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
செல் : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com

கோவை பாலா யூடியூப் சேனல்:
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
https://t.me/kovaibalavegetableclinic



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements