குட் பேட் அக்லி: தென்னிந்திய வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது யார்? MakkalPost

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார்.
அதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
தற்போது, படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு, முக்கியமான சில சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ ஃபிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரீஸ் இணைந்து தயாரிக்கிறது. படப்பிடிப்பு வேகமாக நடப்பதால் பொங்கலுக்கு படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாந்த இசையமைக்கிறார்.
உற்சாகமான செய்தி! #ரோமியோ படங்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா திரையரங்கு உரிமைகளை பெருமையுடன் வாங்குகிறது #குட் பேட் அசிங்கம்
#அஜித்குமார் @MythriOfficial @அதிக்ரவி @trishtrashers @பிரசன்னா_நடிகர் @iam_arjundas @mynameisraahul @இது டிஎஸ்பி @சுனீல்டாலிவுட்… pic.twitter.com/Ku6b9sX4vp— Mythri Movie Makers (@MythriOfficial) அக்டோபர் 25, 2024