June 8, 2025
Space for advertisements

கண் பார்வையை மேம்படுத்தும் சொத்து மருந்து: இந்தியாவில் அனுமதி ரத்து! MakkalPost


கண் பார்வையை மேம்படுத்துதல், படிப்பு மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும்போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும், மிக அருகில் உள்ள பொருட்களைப் பார்க்கும்போது கண் மங்கலத்தைத் தடுக்கும் என கூறப்பட்ட நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்கிறது.

மேலும், மருந்து தயாரிப்பு நிறுவனமானது, இந்த கண் சொட்டு மருந்தை, மக்கள் யார் வேண்டுமானாலும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்கிப் பயன்படுத்தலாம் என்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது கவலையை ஏற்படுத்துவதாகவும், ஆனால், இந்த மருந்துக்கு மத்திய அரசு, மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே விற்பனை செய்யக் கூடிய மருந்தாக அனுமதி வழங்கியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த ‘பிரெஸ்வு’ (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைக் கூறி விளம்பரம் செய்வது, மருந்தின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புவதால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட மருந்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements