June 9, 2025
Space for advertisements

இதய நோய்க்கு தேவை எச்சரிக்கைதானே தவிர பயமல்ல! MakkalPost


வெளியூர் பயணங்களின் போது..

நீண்ட தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின் போது டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை போதிய அளவு எடுத்துச் செல்வது நல்லது.

மருத்துவ குறிப்புகள், டாக்டரின் தொலைபேசி எண், போன்ற தகவல்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். குறிப்புகளை தங்கள் மொபைலில் கூட சுருக்கமாக வைத்திருக்கலாம்.

கையில் எப்போதும் வீட்டு முகவரி, அவசர எண் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

பயணத்தின் போது எந்த பரபரப்பும் உள்ளாகாமல், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது நலம். பயணத்தின்போது ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயமும் தேவையற்றது.

ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருந்தால், ஒரு முறை பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் சுற்றுலா கிளம்புவது நல்லது.

ரயில் அல்லது விமானப் பயணம் நல்லது. நீண்ட தூரம் பஸ்சில் அமர்ந்து பயணிப்பது உடல் அசெளரியத்தை ஏற்படுத்தலாம்.

மருந்து தீர்ந்து போனால் அதே மாத்திரைகள் வாங்க வேண்டும். மாற்று மருந்து அல்லது டோசேஜ் மாறினால் பிரச்னையாகிவிடலாம்.

இரண்டு நாள் தானே என்று உணவுக்கட்டுப்பாட்டை மீறிவிட வேண்டும். எங்கு இருந்தாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும்.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements

You may have missed