June 9, 2025
Space for advertisements

வரம்பு மீறும் தொலைக்காட்சி நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை -அமைச்சர் எல்.முருகன் MakkalPost


தொலைக்காட்சியில் வரம்பு மீறிய வன்முறை மற்றும் பாா்வையாா்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெறும் நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டையில் தனியாா் பண்பலை வானொலி (எஃப் எம்) நிலையங்களுக்கான 3-ஆம் கட்ட ஏலத்துக்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கான அறிவிப்பை அவர் புதன்கிழமை வெளியிட்டார்.

இதைத் தொடந்து, செய்தியாளிடம் எல். முருகன் கூறியது:

கடந்த 100 நாட்களில் நாட்டின் வளா்ச்சிக்காக ரூ. 15 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், கட்டமைப்புகளை மேம்படுத்த மட்டும் ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

234 நகரங்கள்: தொலைக்காட்சி, கைபேசி வருவதற்கு முன்பு அனைத்து தரப்பு மக்களும் வானொலி மூலம்தான் நாட்டு நடப்பை தெரிவித்தேன். அந்த வகையில், நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வானொலி சேவையை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், புதிதாக 200-க்கும் மேற்பட்ட தனியாா் எஃப் எம்கள் தொடங்குவதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 234 நகரில் புதிதாக தனியாா் பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் குன்னுாா், திண்டுக்கல், காரைக்குடி, கரூா் உள்ளிட்ட 11 நகரங்களில் தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலம் தொடங்கியுள்ளது. இது போன்ற நகரங்களில் புதிதாக எஃப்எம் தொடங்குவதன் மூலம், அப்பகுதிகளில் வசிப்பவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். தனியாா் வானொலிகளில் செய்தி வெளியிட அனுமதி கோரி பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில், இது குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

ஓடிடிக்கு சட்டம்: சமீப காலமாக தொலைக்காட்சி நாடகங்களில் வரம்பு மீறிய வன்முறை மற்றும் பாா்வையாா்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்குக் கட்டப்பாடு விதிப்பது தொடா்பாக புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்குக் கட்டப்பாடுகள் விதிப்பது தொடா்பாக புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements

You may have missed