தங்கல் நடிகை சுஹானியின் மரணம் – டெர்மடோமையோசிடிஸ் நோய் அறிகுறிகள் MakkalPost

முதலில், சுஹானிக்கு இடது கையில் லேசான வீக்கம் உள்ளது. பிறகு தோலில் அடிக்கடி ஏற்படும் பாதிப்புகள். அதற்காக பல மருத்துவர்களைப் பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்புதான், ஐம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்குதான் அவருக்கு டெர்மடோமையோசிடிஸ் என்ற அரிய நோய் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஸ்டீரியாய்ட் வகை மருந்துகளைக் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர், எனவே நோயெதிர்ப்பு சக்தியில் கோளாறு ஏற்பட்டு அதனால் உருவாகும் நோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள். ஏனெனில் பல நோய்களின் அறிகுறிகள், அரிய நோய்களுக்கான அறிகுறிகளாகவும் உள்ளன. ஒரு நோய் வந்ததும், முதலில் தோல் மருத்துவர், நுரையீரல் நிபுணர், நரம்பியல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர்களை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் வாத நோய் மருத்துவத்தை அணுகுகிறார்கள். ஆனால், அதற்குள் நோய் முற்றிவிடுகிறது. பல வாத நோய்களின் அறிகுறிகள் இந்த மேற்கண்ட நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்திருப்பது இதற்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த டெர்மடோமையோசிடிஸ் முதலில் தோலை பாதித்தாலும் தசைகள், மூட்டுகள், நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றை பாதிக்கிறது. இதனால், சில நேரங்களில் சில நேரங்களில் ஏற்படும் அழற்சி தடுப்பு மருந்துகளுடன் இந்த பிற மருந்துகளும் சேர்த்து அளிக்க வேண்டியதாகிறது.
நோய்யெதிர்ப்பாற்றலில் ஏற்படும் கோளாறு ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து தெளிவான புரிதல் எதுவும் இல்லை. இது பல்வேறு காரணிகளால் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக நுண்ணுயிர் தாக்குதல், புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு, உடலுக்கு ஒவ்வாத மருந்துகள், மன அழுத்தம், மரபு சார்ந்த நோய் போன்றவையும் முக்கியப் பங்காகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கரோனா உறுதி செய்யப்பட்டபோது பிசிஆர் பாசிட்வ் ஆனவர்களுக்கு நோய்யெதிர்ப்பு சக்தியில் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளையில், இந்த நோய்யெதிர்ப்பாற்றலில் கோளாறு ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும் ஆனால் உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் என்றும் கூறுகிறது மருத்துவ உலகம்.
இதற்கான அறிகுறிகள்..
-
தோலில் தடிமன் போன்ற பாதிப்புகள் கன்னங்கள், நெஞ்சுப்பகுதி, முதுகில்.
-
தோள்பட்டை தசைகளில் தளர்ச்சி, கைகள், இடுப்பு, தொடைப்பகுதி, கழுத்துகளில் வலி உருவாகலாம்.
-
நிலையிலிருந்து எழுந்திருப்பது, கைகளை மேலே உயர்த்துவதற்கு சிரமப்படுவது போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.