June 9, 2025
Space for advertisements

காசநோய் கரோனாவால் தீவிர தாக்கம் இல்லை: ஆய்வில் தகவல் MakkalPost


கரோனா தொற்றுக்குள்ளான காசநோய் தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொற்றுக்குள்ளான காசநோயாளிகளின் சளி மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காசநோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு விகிதம் அதிகரித்தது என்பது குறித்த ஆய்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, 384 பேரின் சளி மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவா்களில் 88 போ பெண்கள். 296 போ ஆண்களாவா. அதில் 22 பேருக்கு காசநோயுடன் கரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது.

காசநோயாளிகள் மற்றும் அதனுடன் கரோனாவுக்கு உள்ளானவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், தாக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன.

அதில், இரு தரப்பினருக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இரு தொற்றுகளுமே சுவாசப் பாதையில் ஊடுருவி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே, நுரையீரலில் கரோனா தொற்று அதிக வீரியத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியதாகவும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கூடுதல் எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினால் மேலும் சில தகவல்களைக் கண்டறிய முடியும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements