கரோனா தடுப்பூசியால் ‘ரத்தம் உறைதல்’ பாதிப்பு -ஆய்வில் தகவல் MakkalPost

கரோனா தடுப்பூசியால் ‘ரத்தம் உறைதல்’ பாதிப்பு என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராசெனெகா நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
கரோனா தொற்றை உண்டாக்கும் சார்ஸ் கோவிட் வைரஸை கட்டுப்படுத்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராசெனெகா ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்தி பல்வேறு தீவிர உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பு ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, வெக்ஸ்ஸேவ்ரியா என்ற பெயரிலும் அழைக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்படுவதற்கு முன், அங்கு இந்த தடுப்பூசி செலுத்திய ஜெமி ஸ்காட் என்ற நபருக்கு, ஆஸ்ட்ராசெனெகா தயாரித்த தடுப்பூசியை செலுத்தியதால், மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு, ஏப்ரலில் ஜெமி ஸ்காட்க்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆஸ்ட்ராசெனெகா நிறுவனம் மீது ஜெமி ஸ்கட்டால் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் ஆஸ்ட்ராசெனெகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்தி சிலருக்கு ‘ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ‘த்ரோம்போஸைடோபேனியா சிண்ட்ரோம்’ பாதிப்புடன் கூடிய ‘த்ரோம்போஸிஸ்’ காரணமாக, ரத்தத்தில் (பிளேட்லெட்ஸ்) ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறையும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்த விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படுமென்று தெரிகிறது. இந்தியாவில், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி நிறுவனம் தயாரிக்கும் உரிமையை செரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.